8-அறிவியல்-நுண்ணுயிரிகள்-மதிப்பீடு-வினா-விடைகள்

                                                             நுண்ணுயிரிகள்

மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. நுண்ணுயிரிகள் _______________ இல் அளவிடப்படுகின்றன. 

அ) செ.மீ ஆ) மி.மீ  

இ) மைக்ரான் ஈ) மீட்டர் 

விடை : இ) மைக்ரான் 

2. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை _______________

அ) புரோட்டோசோவா ஆ) வைரஸ்  

இ) பாக்டீரியா ஈ) பூஞ்சை 

விடை : ஆ) வைரஸ் 

3_______________ஒரு புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்.  

அ) வைரஸ் ஆ) ஆல்கா  

இ) பூஞ்சை ஈ) பாக்டீரியா 

விடை : ஈ) பாக்டீரியா 

4. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் _______________பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

அ) 2 ஆ) 3  

இ) 4 ஈ) 5 

விடை : இ) 4 

5. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி _______________என அழைக்கப்படுகிறது. 

அ) பிளாஸ்மோடியம் ஆ) இன்ஃபுளூயன்ஸா 

இ) விப்ரியோ காலரே ஈ) ஆப்தோவைரஸ் 

விடை : ஆ) இன்ஃபுளூயன்ஸா 

II.கோடிட்ட இடத்தை நிரப்புக 

1. _______________பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.  

விடை : பெனிசிலியம் கிரைசோ ஜீனம் 

2. _______________என்பவை நோய்த் தொற்றுடைய புரதத் துகள்களாகும். 

 விடை : பிரியான் 

3. செல்லுக்கு வெளியே காணப்படும் வைரஸ்கள்_______________எனப்படுகின்றன. விடை : விரியான் 

4. நுண்ணுயிரிகளை _______________ன் உதவியுடன் காண முடியும் 

விடை : நுண்ணோக்கியின் 

5. ஒரு முனையில் கசையிழைகளைப் பெற்ற பாக்டீரியாக்கள் _______________ ஆக வகைப்படுத்தப் பட்டுள்ளன. 

விடை : ஒருமுனை கற்றைக் கசையிழை 

III. சரியா அல்லது தவறா எனக்கூறுக. தவறான வாக்கியத்தைத் திருத்தி எழுதுக. 

1. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் என அழைக்கப்படுகின்றன. 

விடை : சரி 

2. பெண் அனோபிலஸ் கொசுக்கள் டெங்கு வைரஸ் கிருமிகளைப் பரப்புகின்றன. 

விடை : தவறு சரியான கூற்று- பெண் அனோபிலஸ் கொசுக்கள் பிளாஸ்மோடியம் (புரோட்டோசோவா) என்ற நுண்ணுயிரியை எடுத்துச் செல்கின்றன. 

3. சின்னம்மை ஒரு தொற்று நோயாகும் 

விடை : சரி 

4.சிட்ரஸ் கேன்கர் பூச்சிகளால் பரவுகிறது. 

விடை : தவறு சரியான கூற்று- சிட்ரஸ் கேன்கர் காற்று / நீர் மூலம் பரவுகிறது 

5. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.

விடை : சரி 

IV. பொருத்துக. 


நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா

தடுப்பூசி 

காசநோய்

பிரியான்

குரு

லேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்

புரோபயாட்டிக்ஸ் 

பாக்டீரியா

எட்வர்ட் ஜென்னர்

ரைசோபியம்

விடை : 


நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா

ரைசோபியம்

காசநோய்

பாக்டீரியா

குரு

பிரியான் 

புரோபயாட்டிக்ஸ் 

லேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்

எட்வர்ட் ஜென்னர்

தடுப்பூசி  


V. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தெரிவு செய்யவும். 

1. கூற்று : மலேரியா புரோட்டோசோவாவினால் உண்டாகிறது. 

காரணம் : இந்நோய் கொசுவினால் பரவுகிறது. 

2.கூற்று : ஆல்காக்கள் பிறசார்பு உயிரிகளாகும்.  

காரணம் : அவை பச்சையத்தைப் பெற்றிருப்பதில்லை. 

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல. 

இ) கூற்று சரி. காரணம் தவறு. 

ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி. 




விடைகள் : 

  1. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

  2.  ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி. 

VI. மிகச் சுருக்கமாக விடையளி. 

1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக. 

விடை

நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் : 

ரைசோபியம் 

சயனோ பாக்டீரியா 

நாஸ்டாக் 

2. வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியாவின் பெயரை எழுதுக. 

விடை : 

வினிகர் தயாரிக்கப் பயன்படும் பாக்டீரியா அசிட்டோபாக்டர் ஆகும். 

3. ஏதாவது மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்களை எழுதுக. 

விடை : 

மூன்று புரோட்டோசோவாக்களின் பெயர்கள் : 

அ. பாரமீசியம் 

ஆ. யூக்ளினா 

இ. பிளாஸ்மோடியம் 

4.பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் யார்? 

விடை : 

பெனிசிலியத்தைக் கண்டறிந்தவர் சர்.அலெக்ஸாண்டர் பிளம்மிங் ஆவார். 

5. தடுப்பூசி போடுவதன் மூலம் எந்த நோயைத் தடுக்கலாம்? 

விடை : 

தடுப்பூசி போடுவதன் மூலம் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி,  ரூபெல்லா, காசநோய்  போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

VII. சுருக்கமாக விடையளி. 

1. வடிவத்தின் அடிப்படையில் நான்கு வகையான பாக்டீரியாக்களின் பெயர்களை எழுதுக. 

விடை : 

  • பேசில்லை - கோல் வடிவ பாக்டீரியா 

  • ஸ்பைரில்லா - சுருள் வடிவ பாக்டீரியா 

  • காக்கை - கோள அல்லது பந்து வடிவ பாக்டீரியா 

  • விப்ரியோ - கமா வடிவ பாக்டீரியா 

2. எதிர்உயிர்க்கொல்லி என்றால் என்ன? 

விடை : 

  • "ஆன்டி" என்ற வார்த்தை "எதிராக" என்று பொருள் தருகிறது.

  • எதிர் உயிர்க்கொல்லி என்பவை பிற உயிரினங்களுக்கு நச்சாக உள்ள உயிரினங்களால் உருவாக்கப்படும் பொருள்களாகும்.

  • ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர் உயிர்க்கொல்லி ஸ்ரெப்டோமைசிஸ் என்ற பாக்டீரியாவிலிருந்து பெறப்படுகிறது. இது பல்வேறு வகையான பாக்டீரியத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. எ.கா. பிளேக்

3. நோய்க்கிருமிகள் என்றால் என்ன? 

விடை : 

  • சில நுண்ணுயிரிகள் நோய்களை ஏற்படுத்துவதால் "நோய்க்கிருமிகள்" என்றழைக்கப்ப்படுகின்றன. 

  • இவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. 

  • நுண்ணுயிரிகள் காற்று, நீர், கொசு, விலங்குகள் கடிப்பது அசுத்தமான உணவு, மற்றும் அசுத்தமான  மண் போன்றவை மூலம் பரவுகின்றன. 

4. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் மனிதரில் எவ்வாறு நுழைகின்றன? 

விடை : 

  • நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் தோலில் ஏற்படும் வெட்டு மற்றும் காயங்கள், வாய் அல்லது மூக்கின் வழியே உடலினுள் நுழைந்து நோய்களை ஏற்படுத்துகின்றன. 

  • (எ.கா) வைரஸினால் உண்டாகும் " ஃப்ளூ" காய்ச்சல் காற்றின் மூலம் பரவுகிறது. நோயாளிகள் தும்மும் போது தெறிக்கும் திவலைகளில் உள்ள வைரஸ்கள் காற்றில் பரவி சுவாசத்தின் மூலம் ஆரோக்கியமான ஒருவரின் உடலின் உள்ளே நுழைகின்றன. 

5. விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை ஏன்? 

விடை : 

விவசாயத்தில் நுண்ணுயிரிகள் அத்தியாவசியமானவை, ஏனெனில்  

  • நுண்ணுயிரிகள் கழிவுகளைச் சிதைவடையச் செய்து மண்ணை வளமுடையதாக்குகின்றன.

  • வேர் முடிச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியங்கள், வளிமண்டல நைட்ரஜனை தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான நைட்ரேட்டுகளாக மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படுத்துகின்றன. 

  • நுண்ணுயிரிகள் தீங்குயிரிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க உதவுகின்றன.  (எ.கா) பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ் (Bt பஞ்சு)  

 VIII. விரிவாக விடையளி. 

1. பாக்டீரியா மற்றும் அதன் அமைப்பினைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக. 

விடை : 

  பாக்டீரியா: 

  • பாக்டீரியங்கள் ஒரு செல்லாலான புரோகேரியோட்டுகள் (உட்கரு அற்றவை) ஆகும். இவை பூமியின்மீது முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாகக் கருதப்படுகின்றன. 

  • வகைப்பாட்டியலில் மொனிரா என்னும் உலகத்தின் கீழ் இவை இடம் பெற்றுள்ளன. 

  • பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு ‘பாக்டீரியாலஜி’ எனப்படுகிறது.

  • பாக்டீரியாக்கள் 1µm முதல் 5µm (மைக்ரோமீட்டர்) அளவுடையவை. சுவாசத்தின் அடிப்படையில்

  • இவை இரண்டு வகைப்படும். அவை:

• காற்று சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது)

•காற்றில்லா சுவாச பாக்டீரியா (சுவாசத்திற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதில்லை)

செல்லின் அமைப்பு

  • பாக்டீரியா, செல்சுவர் எனப்படும் வெளி அடுக்கினைக் கொண்டுள்ளது. உட்கரு பொருள்கள் நியூக்ளியாய்டு எனக் குறிப்பிடப்படுகின்றன. 

  • உட்கரு சவ்வு காணப்படுவதில்லை. 

  • சைட்டோபிளாசத்தில் பிளாஸ்மிட் என அழைக்கப்படும் கூடுதல் குரோமோசோமல் டி.என்.ஏ-க்கள் காணப்படுகின்றன. 

  • பிற செல் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம் எண்டோபிளாச வலைப்பின்னல் ஆகியவை) காணப்படுவதில்லை. 

  • கசையிழையினால் இடப்பெயர்ச்சி நடைபெறுகின்றது.

2. மருத்துவத் துறையில் நுண்ணுயிரிகள் எவ்வாறு பயன்படுகின்றன? 

விடை :  

அ. எதிர்உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்) 

  • எதிர்உயிர்க்கொல்லி என்பவை பிற உயிரினங்களுக்கு நச்சாக உள்ள உயிரினங்களால் உருவாக்கப்படும் பொருள்களாகும். 

  • பெனிசிலின் சர்.அலெக்ஸாண்டர் பிளம்மிங் என்பவரால் கண்டறியப்பட்டது. இது டெட்டனஸ், டிப்தீரியா போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. 

  • ஸ்ட்ரெப்டோமைசின் பாக்டீரியத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.  

ஆ. தடுப்புசிகள். 

  • தடுப்பூசிகள் இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. 

  • நோயாளியின் உடலில் தடுப்பூசியைச் செலுத்தும்போது, உடலானது நோய் எதிர்ப்புப் பொருளை (ஆன்டிபாடிகள்) உற்பத்தி செய்கின்றது. 

  • அது நோய்க்கிருமிகளுக்கு எதிராகப் போராடுகின்றது. 

  • இந்த நோய் எதிர்ப்புப் பொருள்கள் உடலிலேயே தங்கியிருந்து, எதிர் காலத்தில் நோய்க்கிருமிகளின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. 

  • (எ.கா) தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா ஆகிய நோய்களுக்கு MMN தடுப்பூசியும் காசநோய்க்கு BCG (Bacille Calmette Guerin) தடுப்பூசியும் வழங்கப்படுகின்றன.

3. நுண்ணுயிரிகளால் மனிதனுக்குஏற்படும் பொதுவான நோய்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக. 

விடை : 

நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு பல்வேறு வகையான நோய்கள் உண்டாகின்றன. 

  • காசநோயானது மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்ற பாக்டீரியாவால் காற்றின் மூலமும் நோய்த் தொற்றுடைய மனிதனின் சளி மூலமும் பரவுகிறது. இந்நோய் ஏற்பட்டால் தொடர்ச்சியான இருமல், இரத்தத்துடன் கூடிய சளி,எடை இழப்பு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம். காச நோயைத் தடுக்க BCG  தடுப்பூசி செயல்படுகிறது.

  • சாதாரண சளியானது இன்புளூயன்சா வைரஸால் காற்றின் மூலம் பரவுகிறது. இந்நோய் ஏற்பட்டால் சளி ஒழுகுதல், தும்முதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். நோயாளியைத்தனிமைப்படுத்துதன் மூலம் இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கமுடியும்.

4. மனிதரில் நன்மை தரும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம்? 

விடை : 

எதிர் உயிர்க்கொல்லிகளை நாம் நோய்களுக்காக எடுத்துக்கொண்ட பிறகு நமது உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியங்களை இழக்க நேரிடலாம். இவற்றை ஈடு செய்ய புரோபாக்டீரியங்கள் உதவுகின்றன.

தயிர் மற்றும் பாலை பதப்படுத்தி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் நன்மை தரும் பாக்டீரியங்களைப் பெறமுடியும்.

லேக்டோபேசில்லஸ் மற்றும் பைஃபிடோபாக்டீரியங்கள் நன்மை தரும் பாக்டீரியங்களை மேம்படுத்த உதவுகின்றன.

  • மனிதனின் குடலில் வாழும் லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும் பாக்டீரியா உணவு செரிமானத்தில் உதவுகிறது. மேலும், தீங்கு தரும் நோய்க் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. 

5. புரோபயாட்டிக் பற்றி சிறுகுறிப்பு வரைக. 

விடை

புரோபயாட்டிக்குகள் : 

தயிர் மற்றும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிற பால் பொருள்களில் பயன்படுத்தப்படும் கூடுதல் உயிருள்ள உணவுப் பொருள்கள் புரோபயாட்டிக்குகள் ஆகும். 

  • எ.கா.லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் மற்றும் பைஃபிடோபாக்டீரியம் பைபிடம். 

  • இந்த பாக்டீரியங்கள் குடல் பகுதியிலுள்ள நன்மை செய்யும் பலவகையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவித்து குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து மற்றும் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன. 

  • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதன் மூலம் வயிற்றுப் போக்கு நோய்களைத் தடுக்கின்றன.  


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்