8-அறிவியல்-காற்று-மதிப்பீடு-வினா-விடைகள்

 

காற்று


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?

(அ) முழுமையாக எரியும் வாயு (ஆ) பகுதியளவு எரியும் வாயு

(இ) எரிதலுக்குத் துணை புரியாத வாயு (ஈ)எரிதலுக்குத்துணை புரியும்  வாயு

விடை:(ஈ) எரிதலுக்குத் துணை புரியும் வாயு

2. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் _____________உள்ளது

(அ) காற்று (ஆ) ஆக்சிஜன்

(இ) கார்பன் டை ஆக்சைடு (ஈ) நைட்ரஜன்

விடை:(இ) கார்பன் டை ஆக்சைடு

3. சால்வே முறை_____________உற்பத்தி செய்யப் பயன்படுகிறது

(அ) சுண்ணாம்பு நீர் (ஆ) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்

(இ) வாலை வடி நீர் (ஈ) சோடியம் கார்பனேட் 

விடை:(ஈ) சோடியம் கார்பனேட்

4. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து_____________மாற்றுகிறது

(அ) நீலலிட்மசை சிவப்பாக (ஆ) சிவப்பு லிட்மசை நீலமாக

(இ) ஊதா லிட்மசை மஞ்சளாக (ஈ) லிட்மசுடன் வினைபுரிவதில்லை.

விடை: அ) நீல லிட்மசை சிவப்பாக

5. அசோட் எனப்படுவது எது?

(அ) ஆக்சிஜன் (ஆ) நைட்ரஜன்

(இ) சல்பர் (ஈ) கார்பன்டை ஆக்சைடு 

விடை: ஆ) நைட்ரஜன்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. _____________ அத்தியாவசியமான உயிர் எனப்படுகிறது 

விடை : ஆக்சிஜன்

2. நைட்ரஜன்காற்றைவிட_____________ 

விடை : இலேசானது

3_____________உரமாகப் பயன்படுகிறது. 

விடை : நைட்ரஜன்

4. உலர்பனி _____________ஆகப்பயன்படுகிறது. 

விடை : குளிரூட்டி

5. இரும்பை நீரேறிய இரும்பு ஆக்சைடாக மாற்றும் நிகழ்வு_____________ எனப்படும்.

விடை : துருப்பிடித்தல்


III. பொருத்துக: 


நைட்ரஜன்

உயிரினங்களின் சுவாசித்தல்

ஆக்சிஜன்

உரம்

கார்பன் டை ஆக்சைடு

குளிர்பதனப் பெட்டி

உலர்பனி

தீயணைப்பான்


விடை:


நைட்ரஜன்

உரம்

ஆக்சிஜன்

உயிரினங்களின் சுவாசித்தல்

கார்பன் டை ஆக்சைடு

தீயணைப்பான்

உலர்பனி

குளிர்பதனப் பெட்டி 


IV. சுருக்கமாக விடையளி.

1.  ஆக்சிஜனின் இயற்பியல் பண்புகள் சிலவற்றை எழுதுக


  • ஆக்சிஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.

  • ஆக்சிஜனின் இயற்பியல் பண்புகள்:

  • ஆக்சிஜன் குளிர்ந்த நீரில் உடனடியாகக் கரையும்.

  • காற்றைவிட கனமானது

  • இது எரிதலுக்கு துணைபுரிகிறது.


2. நைட்ரஜனின் பயன்கள் யாவை?

நைட்ரஜனின் பயன்கள்:

  • திரவநைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.

  • சில வேதிவினைகள் நிகழ்வதற்குத் தேவையான மந்தத் தன்மை நிலவச் செய்கிறது.

  • இது வாகனங்களின் டயர்களில் நிரப்பப் பயன்படுகிறது.

3. அலோகங்களுடன் நைட்ரஜனின் வினையை எழுதுக. விடை : அலோகங்களுடன் நைட்ரஜனின் வினை :

அலோகங்களான ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்றவற்றுடன் நைட்ரஜன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து அவற்றின் நைட்ரஜன் சேர்மங்களைத் தருகிறது.



உதாரணம்  


5. உலக வெப்பமயமாதல் என்றால் என்ன?

சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நிலப்பரப்பு மற்றும் கடல் பரப்பினால் உறிஞ்சப்பட்டு தொடர் வினையாக வெப்பம் அல்லது அகச்சிவப்புக்கதிர்களை வளிமண்டலத்தில் உமிழ்கின்றன. வளிமண்டலத்திலுள்ள CFC வாயுக்கள் இவற்றை உறிஞ்சி மீண்டும் அனைத்து திசைகளிலும் அனுப்பி பூமியின் மேற்பரப்பு வெப்ப நிலையை தொடர்ந்து ஒரே நிலையில் தக்கவைக்கின்றன. CFC வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்ப நிலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவே உலக வெப்பமயமாதல் எனப்படும்.


6. உலர்பனி என்பது என்ன? அதன் பயன்களை எழுதுக.

(i) திட கார்பன் டை ஆக்சைடு உலர் பனிக்கட்டி எனப்படுகிறது. இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம் இதன்மீது விழுந்து அடர்த்தியான வெண்ணிற புகைமூட்டம் போன்று காணப்படுகிறது.

(ii) இது குளிர்பதனப் பெட்டிகளில் குளிரூட்டியாகப் பயன்படுகிறது


V. விரிவாக விடையளி.

1. தெளிந்த சுண்ணாம்பு நீரின் வழியே கார்பன் டை ஆக்சைடு வாயுவைச் செலுத்தும்போது என்ன நிகழ்கிறது? அதற்கான சமன்பாட்டைத் தருக.

சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால், கரைசல் பால் போல் மாறுகிறது.

அதிகளவு கார்பன் டை ஆக்சைடை சுண்ணாம்பு நீரில் செலுத்தும்பொழுது முதலில் பால் போன்ற நிறம் தோன்றி பின்னர் அது மறைகிறது. இதற்குக் காரணம் கரையக்கூடிய கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட், Ca(HCO3)2 உருவாவதே ஆகும். 


2. கீழ்க்கண்ட தனிமங்கள் ஆக்சிஜனுடன் எரியும் போது உருவாகும் பொருட்களை எழுதுக.

அ) கார்பன் ஆ) சல்பர் இ) பாஸ்பரஸ் ஈ) மெக்னீசியம் உ) இரும்பு ஊ) சோடியம்


தனிமங்கள்

விளைபொருள்

கார்பன் 

கார்பன் டை ஆக்சைடு (CO2)

சல்பர் 

சல்பர் டை ஆக்சைடு (SO2)

பாஸ்பரஸ் 

பாஸ்பரஸ் டிரை ஆக்சைடு (P2O3) பாஸ்பரஸ் பென்டாக்சைடு(P2O5)

மெக்னீசியம் 

மெக்னீசியம் ஆக்சைடு (MgO)

இரும்பு 

இரும்பு  ஆக்சைடு (Fe2O3)

சோடியம்

சோடியம் ஆக்சைடு (Na2O)



3. கீழ்க்காண்பவற்றுடன் கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு வினைபுரிகிறது?

அ) பொட்டாசியம் ஆ) சுண்ணாம்பு நீர் இ) சோடியம் ஹைட்ராக்சைடு


அ) பொட்டாசியம் :


கார்பன் டை ஆக்சைடு பொட்டாசியத்துடன் வினைபுரிந்து பொட்டாசியம் கார்பனேட்டை உருவாக்குகிறது.

4K + 2CO2 → C + 2K2CO3

    பொட்டாசியம் கார்பனேட்


ஆ) சுண்ணாம்பு நீர் :

  சுண்ணாம்பு நீரில் ஓரளவு கார்பன் டை ஆக்சைடை செலுத்தும்பொழுது கரையாத கால்சியம் கார்பனேட் உருவாவதால், கரைசல் பால் போல் மாறுகிறது.


Ca(OH)2 + CO2 --> CaCO3 + H2O

கால்சியம் கார்பனேட்


இ) சோடியம் ஹைட்ராக்சைடு :

சோடியம் ஹைட்ராக்சைடு (காரம்), கார்பன் டை ஆக்சைடு (அமிலம்) மூலம் நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தப்பட்டு சோடியம் கார்பனேட்டையும் (உப்பு) நீரையும் தருகிறது.


காரம் + அமிலம் → உப்பு + நீர்

2 NaOH  + CO2  → Na2CO3 + H2

சோடியம் கார்பனேட்


4. அமில மழையின் விளைவுகள் யாவை? அதை எவ்வாறு தடுக்கலாம்?

அமில மழையின் விளைவுகள் :

  • விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.

  • மண்ணின் வளத்தை மாற்றுவதோடு தாவரங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும் அழிக்கிறது.

  • கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்குக் காரணமாகிறது.


அமில மழையைத் தடுக்கும் வழிமுறைகள் :

அமில மழையின் பாதிப்புகளை கீழ்க்கண்ட வகைகளில் தடுக்கலாம் :

  • பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்

  • அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் பயன்படுத்துதல்.

  • மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.

  • தொழிற்சாலைக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.


VI. உயர் சிந்தனை வினாக்கள்.

1. கோடைக்காலங்களில் சில நேரங்களில் சோடா பாட்டில்களைத் திறக்கும்பொழுது அவை வெடிப்பது ஏன்?

வாயுக்களில் விரிவாக்கத்தின் குணகம் அதிகம். எனவே, பாட்டிலில் உள்ள வாயு வெப்பத்தால் விரிவடைகிறது, அதனால் பாட்டிலின் உள்ளே அழுத்தம்  அதிகரித்து சில சமயங்களில் கோடைகாலத்தில் பாட்டில் வெடிக்கும் நிலை ஏற்படுகிறது.


2. இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது. இதன் காரணம் என்ன?

இரவு நேரங்களில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது. எனவே இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்கினால் சுவாசிக்க ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே இரவு நேரங்களில் மரங்களின் அடியில் படுத்து உறங்குவது

ஆரோக்கியத்திற்குக் கேடு எனப்படுகிறது.


3.மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்துவிடுகிறது ஏன்?

மீன்கள் செவுள்களால் சுவாசிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளன. செவுள்கள் நீரிலுள்ள ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. மீங்கள் நீரிலிந்து வெளிவந்தவுடன் செவுள்களால் ஆக்சிஜனைக் கொடுக்க முடிவதில்லை. மீன்களால் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனைக் கொண்டு சுவாசிக்க இயலாது. எனவே மீனை நீரிலிருந்து வெளியே எடுத்தவுடன் இறந்து விடுகிறது.

4. பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சுவாசிக்கின்றனர்?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மின்னாற்பகுப்பு மூலம் மின்னோட்டத்தைச் செலுத்தி நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிரித்துப்பயன்படுத்துகிறார்கள்.

2H2O 2H2 + O2

ஆக்சிஜன் வளிமண்டலத்திற்கு அப்பால் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மறு சுழற்சி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் பூமியின் வளிமண்டலத்திற்கு அப்பால் செல்லும் விண்வெளி வீரர்கள் சுவாசிக்கின்றனர்.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்