வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்
உரைநடை உலகம் இயல் ஒன்று -வளர்தமிழ் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள்__________ அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை விடை: ஆ) பழமை 2. ‘இடப்புறம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம் ஈ) இடப் + புறம் விடை: இ) இடம் + புறம் 3. ‘சீரிளமை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_________ அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை ஈ) சீற் + இள விடை: அ) சீர் + இளமை 4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________ அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம் விடை: ஆ) சிலப்பதிகாரம் 5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________ அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ் ஈ) கனினிதமிழ் விடை: ஆ) கணினித்தமிழ் 6. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ________ அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன் ...