VIII-அறிவியல்-நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்-மதிப்பீடு-வினா-விடைகள்

                             நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

மதிப்பீடு:


I.  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காகிதம் எரிதல் என்பது ஒரு ________ மாற்றம்.

அ) இயற்பியல்

ஆ) வேதியியல்

இ) இயற்பியல் மற்றும் வேதியியல்

ஈ) நடுநிலையான

விடை: ஆ) வேதியியல்


2. தீக்குச்சி எரிதல் என்பது ________ அடிப்படையிலான வேதிவினைக்கு ஒரு

எடுத்துக்காட்டாகும்.

அ) இயல் நிலையில் சேர்தல்

ஆ) மின்சாரம்

இ) வினைவேக மாற்றி

ஈ) ஒளி

விடை: அ) இயல் நிலையில் சேர்தல்


3. _______ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

அ) வெள்ளீயம் 

ஆ) சோடியம்

இ) காப்பர் 

ஈ) இரும்பு 

விடை: ஈ) இரும்பு 


4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி ________

அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு

ஆ) மெலனின்

இ) ஸ்டார்ச்

ஈ) ஓசோன்

விடை: ஆ) மெலனின்


5. பிரைன் என்பது ________ இன் அடர் கரைசல் ஆகும்.

அ) சோடியம் சல்பேட்

ஆ) சோடியம் குளோரைடு

இ) கால்சியம் குளோரைடு

ஈ) சோடியம் புரோமைடு

விடை: ஆ) சோடியம் குளோரைடு


6. சுண்ணாம்புக்கல் ________ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

அ) கால்சியம் குளோரைடு

ஆ) கால்சியம் கார்பனேட்

இ) கால்சியம் நைட்ரேட்

ஈ) கால்சியம் சல்பேட் 

விடை: ஆ) கால்சியம் கார்பனேட்


7. கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?

அ) வெப்பம்

ஆ) ஒளி

இ) மின்சாரம்

ஈ) வினைவேக மாற்றி

விடை: இ) மின்சாரம்


8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் _______________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

அ) நைட்ரஜன்

ஆ) ஹைட்ரஜன்

இ) இரும்பு

ஈ) நிக்கல்

விடை: இ) இரும்பு


9. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் ________ ஐ உருவாக்குகின்றன.

அ) அமிலமழை

ஆ) காரமழை

இ) அதிகமழை

ஈ) நடுநிலைமழை

விடை: அ) அமிலமழை


10. _______________ புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன.

அ) கார்பன் டைஆக்சைடு

ஆ) மீத்தேன்

இ) குளோரோ புளூரோ கார்பன்கள்

ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்

விடை: ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒளிச்சேர்க்கை என்பது _____ முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.

விடை: ஒளியின்


2. இரும்பாலான பொருள்கள் ________ மற்றும் ________ உதவியுடன் துருப்பிடிக்கின்றன.

விடை: நீர் மற்றும் ஆக்சிஜன்

3. ___________ தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

விடை: அம்மோனியா

4. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் ________ வாயுக்களைத் தருகிறது.

விடை: குளோரின், ஹைட்ரஜன்

5. _____ என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்.

விடை: வினைவேக மாற்றி

6. வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற  நொதியாகும்.

விடை: பாலி பீனால் ஆக்சிடேஸ்


III.  சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.


1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

விடை: தவறு. ஒரு வேதிவினை என்பது நிரந்தர வினையாகும்.


2. லெட் நைட்ரேட் சிதைவடைதல் ஒளியின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை: தவறு.லெட் நைட்ரேட் சிதைவடைதல் வெப்பத்தின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.


3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பம்கொள் வினையாகும்.

விடை: தவறு. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்ப உமிழ்வினையாகும்.


4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

விடை: சரி


5. வேதிவினைகள் நிகழும் பொழுது ஒளி ஆற்றல் வெளிப்படலாம்.

விடை: சரி


IV. பொருத்துக.


துருப்பிடித்தல்

ஒளிச்சேர்க்கை

மின்னாற்பகுத்தல்

ஹேபர் முறை

வெப்ப வேதி வினை

இரும்பு

ஒளி வேதி வினை

பிரைன்

வினைவேக மாற்றம்

சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்


விடை:

துருப்பிடித்தல்

இரும்பு

மின்னாற்பகுத்தல்

பிரைன்

வெப்ப வேதி வினை

சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்

ஒளி வேதி வினை

ஒளிச்சேர்க்கை

வினைவேக மாற்றம்

ஹேபர் முறை


ஆ.



கெட்டுப்போதல்

சிதைவடைதல்

ஓசோன்

உயிரி வினையூக்கி

மங்குதல்

ஆக்சிஜன்

ஈஸ்ட்

வேதிவினை

கால்சியம் ஆக்சைடு

உணவு


விடை:

கெட்டுப்போதல்

உணவு

ஓசோன்

ஆக்சிஜன்

மங்குதல்

வேதிவினை

ஈஸ்ட்

உயிரி வினையூக்கி

கால்சியம் ஆக்சைடு

சிதைவடைதல்



V.  சுருக்கமாக விடையளி.


1. வேதிவினை என்பதை வரையறு.

ஒரு வேதி மாற்றம் என்பது நிரந்தரமான, மீளாத்தன்மையுடைய மற்றும் புதியபொருளை உருவாக்கக்கூடிய ஒரு மாற்றமாகும். வேதியியல் மாற்றங்களை வேதிவினைகள் என்றும் அழைக்கலாம்


2. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.

வேதிவினைகள் நிகழத் தேவையான நிபந்தனைகள்: 

அ.இயல்பான நிலையில் சேர்தல் 

ஆ.வினைபடுபொருள்களின் கரைசல் 

இ.மின்சாரம் 

ஈ.வெப்பம் 

உஒளி 

ஊ.வினைவேகமாற்ற


3. வினைவேக மாற்றம் என்பதை வரையறு.

சில வேதிப்பொருள்கள், வேதிவினைக்கு உட்படாமல், வினையின் வேகத்தை மட்டும் மாற்ற உதவுகின்றன. ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றியமைக்கக்கூடிய பொருள்கள் வினைவேக மாற்றிகள் எனப்படும். அச்செயல் வினைவேக மாற்றம் எனப்படும்.


4. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது என்ன நிகழ்கிறது?

இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறத்திற்கு மாறுகிறது.இரும்பு காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதிவினைக்குட்படுவதால் நிறம் மாறுகிறது.


5. மாசுபடுதல் என்றால் என்ன?

சுற்றுச்சூழலில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வு மாசுபடுதல் எனப்படும். 


6. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரபரப்பு வேதிவினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழக்கின்றன.  இந்நிகழ்வு மங்குதல் எனப்படும். எடுத்துக்காட்டாக வெள்ளிப் பொருட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும்பொழுது கருமை நிறமுடையதாக மாறுகின்றன


7. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?

‘பிரைன்’ எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்பொழுது சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோ ரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களும் வெளிவருகின்றன. பெருமளவு குளோரின் தயாரிக்க தொழிற்சாலைகளில் இம்முறை பயன்படுகிறது.


8. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா அல்லது வெப்பம் கொள்வினையா?

இது வெப்பம் கொள்வினையாகும்.

9. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?

வேதிவினையில் பங்கு பெறாமல் வேதிவினையின் வேகத்தை மாற்றியமைக்கக்கூடியது வினைவேக மாற்றியாகும்.


10. ஒளிச்சேர்க்கை ஏன் ஒரு வேதிவினையாகும்?

  • ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன் டைஆக்சைடு, நீர் ஆகியவற்றைக் கொண்டு ஸ்டார்ச் என்னும்

உணவுப்பொருளைத் தயாரிக்கும் நிகழ்வாகும்

  • இவ்வாறு ஒளியைக் கொண்டு தூண்டப்படும் வேதிவினைகள் ஒளி வேதிவினைகள் எனப்படும்.

  • புதிய பொருள் உருவாகிற்து மேலும் இது ஒரு மீளா மாற்றம் ஆகும் எனவே ஒளிச்சேர்க்கை ஒரு வேதிவினையாகும்.


VI. விரிவாக விடையளி.


1. வேதிவினை மூலம் சுற்றுசூழல் மீது ஏற்படும் விளைவுகளை விளக்குக.


சுற்றுச்சூழல் மாசுபாடு:

  • நம்முடைய சுற்றுச்சூழலானது சுவாசிப்பதற்குக் காற்றையும், குடிப்பதற்கு நீரையும், உணவு உற்பத்தி செய்ய நிலத்தையும் வழங்கியிருக்கிறது. 

  • தொழிற்சாலைச் செயல்பாடுகள் மற்றும் பெருகி வரும் வாகனங்களால் நம்முடைய சுற்றுச்சூழலானது மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

  • எனவே, சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வு மாசுபடுதல் எனப்படும். 

  • மாசுபடுதலை நிகழ்த்தும் பொருள்கள் மாசுபடுத்திகள் எனப்படும். பொதுவாக மாசுபடுதல் மூன்று வகைப்படும்.

    • அவை காற்று, நீர் மற்றும் நில மாசுபாடாகும்.

  • பெருகிவரும் மனித செயல்பாடுகளால் அதிகளவு  வேதிப்பொருள்கள்  செயற்கையாக உருவாக்கப்பட்டு அவை உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களைப் பாதிப்படையச் செய்கின்றன. 


வேதிப்பொருள்களால் ஏற்படும் விளைவுகள் 


2. உணவுப் பொருள்கள் எவ்வாறு வேதிவினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குக.


உணவு, காய்கறிகள் கெட்டுப்போதல்:

உணவு, காய்கறிகள் கெட்டுப்போதல் மனிதன் உண்பதற்குத் தகுதியில்லாத அளவிற்கு, உணவுப்பொருளில் ஏற்படும் மாற்றமே உணவு கெட்டுப்போதல் எனப்படும். 

என்சைம் என்ற உயிரி வினைவேகமாற்றி மூலம் நடைபெறும் வேதிவினை காரணமாக துர்நாற்றம், நிறமாற்றம், ஊட்டச்சத்து இழப்பு போன்றவை ஏற்பட்டு உணவின் தரம் குறைகின்றது.

உதாரணம்

• முட்டைகள் அழுகும்பொழுது ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் துர்நாற்றம் வீசுகிறது.


மீன், இறைச்சி துர்நாற்றமடித்தல்:


மீன்களும், இறைச்சியும் அதிக அளவில் பலபடிநிறைவுறா கொழுப்பு அமிலங்களைக்கொண்டுள்ளன. இவை காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு துர்நாற்றத்தை வெளிவிடுகின்றன. இந்நிகழ்வு துர்நாற்றமடித்தல் (ஊசிப்போதல்) எனப்படும்.


நறுக்கிய ஆப்பிள்கள் மற்றும் காய்கறிகள் பழுப்பு நிறமாதல்:

ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் ஏற்படும் வேதிவினையால் பழுப்பு நிறமடைகின்றன. இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும்.


3. ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை

எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  • இயல்பான நிலையில் சேர்தல்:

 தீக்குச்சியை உரசும்பொழுது பற்றி எரிதல், இரும்பாலான பொருள்கள் செம்பழுப்பு நிறமாக மாறுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாம் நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம். இத்தகைய மாற்றங்கள் வேதிப்பொருள்கள் அவற்றின் இயல்பான நிலைகளில் இருந்து ஒன்றுடன் ஒன்று வினைபுரியும்பொழுது நிகழ்கின்றன. வினைபடுபொருள்கள் அவற்றின் இயல்பான நிலைகளான திண்மம், திரவம் மற்றும் வாயு நிலைகளிலிருந்து வினைபுரிவதையே இயல்பான நிலையில் சேர்தல் என்கிறோம்.

ஒரு தீக்குச்சியை தீப்பெட்டியின் பக்கவாட்டில் தேய்க்கும்பொழுது வேதிவினை நிகழ்ந்து வெப்பம், ஒளி மற்றும் புகை உருவாகிறது.

  • மின்சாரம் 

நமது வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் இன்றியமையாதது. சில வேதிவினைகள் மின்சாரத்தைக் கொண்டு மட்டுமே நிகழும் இவ்வினைகள் மின்வேதி வினைகள் அல்லது மின்னாற்பகுத்தல் வினைகள் எனப்படுகின்றன

‘பிரைன்’ எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்பொழுது சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களும் வெளிவருகின்றன. பெருமளவு குளோரின் தயாரிக்க தொழிற்சாலைகளில் இம்முறை பயன்படுகிறது.


  • வெப்பம் மூலம் நிகழும் வேதி வினைகள்:

சில வேதி வினைகளை வெப்பத்தின் மூலமே நிகழ்த்த முடியும். இத்தகைய வினைகள் வெப்ப வேதி வினைகள் அல்லது வெப்பச்சிதைவு வினைகள் எனப்படுகின்றன. ஒரு உலர்ந்த சோதனைக் குழாயில் லெட் நைட்ரேட் உப்பினை எடுத்துக்கொண்டு சுடரின் மீது காண்பித்து கவனமாக வெப்பப்படுத்தி. நிகழும் மாற்றங்களை உற்று நோக்கவும். படபட என வெடிக்கும் ஒலி உருவாவதையும், செம்பழுப்பு நிற வாயு வெளிவருவதையும் (நைட்ரஜன் டை ஆக்சைடு) கவனிக்கலாம். 


VII. உயர் சிந்தனை வினாக்கள்


1. ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில்  உதவுக்ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.


ஈஸ்ட் பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் உதவுகின்றன. ஈஸ்ட் பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. நொதித்தலின் போது வெளியிடப்படும் கார்பன்-டை ஆக்சைடு மாவை மென்மையாக்கி தேவையான வடிவம் மற்றும் மிருதுவான தன்மை கொண்டதாகவும், எடை குறைவானதாகவும் மாற்றுகிறது.


2. புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருள்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.


புதைபடிவ எரிபொருள்கள் எரிக்கப்படும்போது, ​​அவை பசுமை இல்ல வாயுவான கார்பன் டை ஆக்சைடை அதிக அளவில் காற்றில் விடுகின்றன. பசுமை இல்ல வாயுக்கள் நமது வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைக்கின்றன, இதனால் புவி வெப்பமடைகிறது. ஏற்கனவே சராசரி புவி வெப்பநிலை 1°C அதிகரித்துள்ளது. இது 1.5°C க்கு மேல் வெப்பம் உயர்ந்தால்  கடல் மட்ட உயர்வு, மோசமான வானிலை, பல்லுயிர் இழப்பு மற்றும் இனங்கள் அழிவது ஏற்படும்.அத்துடன் உணவு பற்றாக்குறை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உடல்நலம் மற்றும் வறுமையையும் உண்டாக்கிவிடும்.


3. கொடுக்கப்பட்டுள்ள அன்றாட வாழ்வியல் செயல்பாடுகளை வேதிவினை நிகழத்தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.

அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்

விடை: வெப்பம்

ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.

விடை: ஒளி மற்றும் வினைபடுபொருள்கள்

இ) கோழி முட்டைகளைச் சமைத்தல்.

விடை: வெப்பம்

ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்.

விடை: மின்சாரம் மற்றும் வினையூக்கி


4. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதைக் குறித்து விவாதிக்க.

தொழிற்சாலைகள்  மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளில் சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் உள்ளன. இந்த வாயுக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கும் மேலும் சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOX) வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்டு காற்றால் கடத்தப்படும் போது அமில மழை பொழிகிறது. SO2 மற்றும் NOX நீர், ஆக்ஸிஜன் மற்றும் பிற வேதிப்பொருள்களுடன் வினைபுரிந்து கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்களை உருவாக்குகின்றன. இவை பின்னர் தரையில் விழுவதற்கு முன்பு தண்ணீர் மற்றும் பிற பொருட்களுடன் கலக்கின்றன.


5. துருப்பிடித்தல் இரும்புப் பொருள்களுக்கு நல்லதா?

இல்லை, துருப்பிடிப்பது இரும்பு பொருள்களுக்கு நல்லதல்ல, ஏனென்றால் துருப்பிடிப்பது இரும்பு பொருளை பலவீனமாகவும் பயனற்றதாகவும் ஆக்குகிறது. இது ஒரு வேதியியல் மாற்றம் என்பதால் துருப்பிடித்த பிறகு அசல் பொருளை திரும்பப் பெற முடியாது.


6.அனைத்துப் பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.

இல்லை, எல்லா பழங்களும் காய்கறிகளும் பழுப்பு நிறத்திற்கு ஆளாகாது. பழங்கள் (பாதாம், பேரீச்சம்பழம், வாழைப்பழங்கள், திராட்சை), காய்கறிகள் (உருளைக்கிழங்கு, காளான்கள்) மற்றும் கடல் உணவுகளிலும் (இறால், நண்டுகள்) என்சைமடிக் பிரவுனிங்கைக் காணலாம். என்சைமடிக் பிரவுனிங் என்பது ஒரு வேதியியல் செயல்முறையாகும், இது பழங்கள் மற்றும் காய்கறிகளின் வெட்டப்பட்ட துண்டுகள் திறந்தவெளியில் சிறிது நேரம் வைக்கப்படும் போது பாலிபினோலாக்ஸிடேஸ் என்ற நொதியால் பழுப்பாதல் ஏற்படுகிறது.



Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்