VIII-அறிவியல்-உயிரினங்களின் ஒருங்கமைவு-மதிப்பீடு-வினா-விடைகள்

                         உயிரினங்களின் ஒருங்கமைவு

மதிப்பீடு


I.  சரியான விடையைத் தேர்ந்தெடு. 

1. ______________ என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது. 

அ. ஸ்கிளிரா 

ஆ. கண்ஜங்டிவா 

இ. கார்னியா 

ஈ. ஐரிஸ் 

விடை: அ. ஸ்கிளிரா


2. ______________ செல்கள் சிறப்பு வாய்ந்த செல்களாகும். இவை உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாற இயலும். 

அ. நரம்பு 

ஆ. மூல 

இ. 

இதய 

ஈ. எலும்பு 

விடை:ஈ. எலும்பு


3. உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் ______________ எனப்படும். அ. தன்னிலை காத்தல் 

ஆ. ஹோமியோபைட்ஸ் 

இ. ஹோமியோஹைனசிஸ் 

ஈ. ஹோமியோவிலிக்ஸ் 

விடை:அ. தன்னிலை காத்தல்


4. காற்றில்லா அல்லது ஆக்சிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ___________ ஐக் கொடுக்கும். 

அ. லாக்டிக் அமிலம் 

ஆ. சிட்ரிக் அமிலம் 

இ. அசிட்டிக் அமிலம் 

ஈ. நைட்ரிக் அமிலம்

விடை:அ. லாக்டிக் அமிலம் 

5. நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் வாயுப்பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு ______________ என்று பெயர்.

அ. உட்சுவாசம்

ஆ. வெளிச்சுவாசம்

இ. சுவாசம்

ஈ. ஏதுமில்லை.

விடை:இ. சுவாசம்


6. சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி ______________

அ. செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும்

ஆ. செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச்செல்லும்

இ. இரு நிகழ்வும் நடைபெறும்

ஈ. இவற்றில் எதுமில்லை.

விடை:ஆ. செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும்



7. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள ______________ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.

அ. குறை செறிவு கரைசல்

ஆ. மிகை செறிவு கரைசல்

இ. நடுநிலைக்கரைசல் 

ஈ. அமிலக் கரைசல்

விடை:அ. குறை செறிவு கரைசல்


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ___________ என்பது உயிரினங்களின்அமைப்பு மற்றும் செயல் அலகு ஆகும்.

விடை:செல்

2. மிகப்பெரிய செல் _______ இன் முட்டை ஆகும்.

விடை:நெருப்புக்கோழி

3. _______________ என்பது காற்றில்லா சுவாசத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

விடை:ஈஸ்ட்

4. கண்களின் இறுதியில் விழித்திரையின் பின்புறம் ___________ நரம்பு அமைந்துள்ளது.

விடை:பார்வை

5. செல்லானது ___________ என்ற அலகால் அளக்கப்படுகிறது.

விடை:மைக்ரான்


III.  சரியா அல்லது தவறா என எழுதுக. தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.

1. குறை செறிவுக் கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.

விடை: தவறு. ஒத்த செறிவு கரைசலில், செல்லிற்கு உள்ளே உள்ள கரைசலின் செறிவும் செல்லிற்கு வெளியே உள்ள கரைசலின் செறிவும் சமம்.


2. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது பரவல் எனப்படும்.

விடை: தவறு. குறைந்த செறிவுடைய மூலக்கூறுகள் அதிக செறிவுடைய மூலக்கூறுகள் உள்ள பகுதிக்கு இடம்பெயர்வது சவ்வூடு பரவல் எனப்படும்


3. மனிதன் ஒரு வெப்ப இரத்தப் பிராணி.

விடை: சரி


4. தசை மடிப்புக்களாலான குரல்வளையானது காற்று நுழையும் போது அதிர்வடைந்து ஒலியை எழுப்புகிறது.

விடை: சரி


5. முன் கண்ணறை திரவம் கண்ணின் வடிவத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 

விடை: தவறு.  முன் கண்ணறை திரவம் லென்சுக்கும், விழி வெண்படலத்துக்கும் ஊட்டமளிக்கிறது.


IV. பொருத்துக.



கார்போஹைட்ரேட்

CO2, நீர் மற்றும் வெப்பம்

குளுக்கோஸ்

அமினோ அமிலம்

புரதம்

குளுக்கோஸ்

அமினோ அமிலம்

கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்

கொழுப்பு அமிலம்

நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள்


விடை:


கார்போஹைட்ரேட்

குளுக்கோஸ் 

குளுக்கோஸ்

CO2, நீர் மற்றும் வெப்பம் 

புரதம்

அமினோ அமிலம்

அமினோ அமிலம்

நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள் 

கொழுப்பு அமிலம்

கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள்



V. மிகச் சுருக்கமாக விடையளி.

1. செல் மாறுபாடு அடைதல் என்றால் என்ன?

நமது உடலானது கருமுட்டை (சைகோட்) என்ற ஒற்றை செல்லிலிருந்தே உருவாக்கப்படுகிறது. கருமுட்டையானது தொடர்ச்சியான பல மைட்டாசிஸ் பிளவுறுதல்களை அடைந்து வெவ்வேறு அளவு, வடிவம் மற்றும் உட்பொருள்களைக் கொண்ட திரள் செல்களாலான கருவை உருவாக்குகிறது. கருச் செல்கள் படிப்ப டியாக அவற்றின் அமைப்பிலும், பணியிலும்  மாற்றங்களை அடைகின்றன. இந்நிகழ்வுக்கு செல் மாறுபாடடைதல் என்று பெயர்.


2. வெவ்வேறு வகையான திசுக்களை வகைப்படுத்துக.


அமைப்பு மற்றும் பணியைப் பொருத்து திசுக்கள் நான்கு வகைப்படும். 

• பாதுகாப்பிற்கான எபிதீலியல் (உறையீட்டு) திசுக்கள் 

• அசைவு மற்றும் இடப்பெ யர்ச்சிக்கான தசைத் (சுருங்குதல்) திசுக்கள் 

• உடலின் வெவ்வேறு அமைப்புகளை இணைக்கும் இணைப்புத் (தாங்குதல்) திசுக்கள் 

• நரம்புத்தூண்டல்களைக் கடத்தும் நரம்புத் திசுக்கள்


3. காற்று நுண்ணறைகளின் பணிகளைக் கூறுக.

காற்று நுண்ணறைகள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டைஆக்சைடின் வாயுப்பரிமாற்றத்திற்கு உதவுகின்றன. 

சுவாச மண்டலத்தின் செயல்மிகுஅமைப்பாக இருந்து நுரையீரல் உள்ளிழுக்கும் போது ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு உடலை இயங்கச் செய்கின்றது.


4. நுரையீரலில் காற்றானது உள்ளிழுக்கப்படும் மற்றும் வெளியேற்றப்படும் நிகழ்வின் பெயரைக் குறிப்பிடு. 

காற்றை நுரையீரல்களுக்குள் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு உள்சுவாசம் எனப்படும்.

நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச்சுவாசம் எனப்படும். 


5. ஊடுகலப்பு ஒத்தமைவான்கள் மற்றும் ஊடுகலப்பு ஒழுங்கமைவான்களை வேறுபடுத்துக.


ஊடுகலப்பு ஒத்தமைவான்கள்

ஊடுகலப்பு ஒழுங்கமைவான்கள

இந்த உயிரினங்கள் சுற்றுச் சூழலுக்கேற்ப தங்கள் உடலின் ஊடுகலப்பு அடர்த்தியை மாற்றிக் கொள்கின்றன. பெரும்பாலான முதுகு நாணற்றவை மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் இவ்வகையில் அடங்கும்.

இந்த உயிரினங்கள் புறச்சூழலின் தன்மை எப்படி இருந்தாலும் உடல் செயலியல் நிகழ்வுகள் மூலம் தங்களது உட்புற ஊடுகலப்பு அடர்த்தியை நிலையான அளவுடன் பராமரித்துக் கொள்கின்றன. 



உதாரணம்: கடல் நீரில் வாழும் மீன்கள்

உதாரணம்: நன்னீரில் வாழும் மீன்கள்


6. வளர்சிதை மாற்றம் – வரையறு.

வளர்சிதை மாற்றம் எனப்படும் மொத்த உயிரி வேதிவினைகளும் ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் பயன்படுத்தும் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சியை உள்ளடக்கியதாகும். இந்நிகழ்ச்சி வளர்மாற்றம்மற்றும்சிதைமாற்றம் என இருவகைப்படும்.



VI. சுருக்கமாக விடையளி.

1. புரோகேரியாடிக் செல் – வரையறு.

பாக்டீரியா, சயனோ பாக்டீரியா மற்றும் மைக்கோ பிளாஸ்மா போன்ற

உயிரினங்களில் உட்கரு காணப்படுவதில்லை. இவ்வகை உயிரினங்கள் புரோகேரியாட்டுகள் என அழைக்கப்படுகின்றன


2. காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.


காற்றுள்ள சுவாசம்

காற்றில்லா சுவாசம்

ஆக்சிஜன் உள்ள சூழலில் நடைபெறுகிறது

ஆக்சிஜன் இல்லாத சூழலில் நடைபெறுகிறது

CO2 மற்றும் நீர் ஆகியவை விளை   பொருள்களாகக் கிடைக்கின்றன

CO2 மற்றும் எத்தனால் அல்லது லாக்டிக் அமிலம் விளை பொருள்களாகக் கிடைக்கின்றன

அனைத்து உயர்நிலை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது

சில நுண்ணுயிரிகள் மற்றும் மனித தசைச் செல்களில் நடைபெறுகிறது



3. கண்ணை ஏன் புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்?

மனிதக் கண்ணானது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்குவதற்காக ஒளியை லென்சு வழியே செலுத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதனால் கண்ணை புகைப்படக் கருவியுடன் ஒப்பிடுகிறோம்


4. தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் யாவை?

உயிர் வாழ்வதற்கு ஏதுவாக மனித உடலியல் மண்டலம் சுயமாக, தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொண்டு சமநிலையைப் பாரமரிப்பது தன்னிலை காத்தல் எனப்படும்.கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மூளை (ஹைபோதலாமஸ்), தானியங்கு நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி

மண்டலங்கள் ஆகியவை தன்னிலை காத்தலை ஒழுங்குபடுத்த உதவும் உறுப்புகள் மற்றும் உறுப்பு மண்டலங்கள் ஆகும்.


VII. விரிவாக விடையளி.

1. மனிதக் கண்ணின் உள்ளமைப்பின் படம் வரைந்து பாகங்களைக் குறி.


2. சவ்வூடு பரவலை உதாரணத்துடன் விளக்குக.

சவ்வூடு பரவல்:

  • நீர்த்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு கரைப்பான் மூலக்கூறுகள் அரைகடத்தி அல்லது தேர்வுக் கடத்து சவ்வின் வழியே இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி சவ்வூடு பரவல் எனப்படும். 

  • சவ்வின் இரு புறமும் உள்ளே செறிவு சமநிலையை அடையும்வரை கரைப்பான் மூலக்கூறுகள் செறிவு குறைந்த கரைசலில் இருந்து செறிவு மிக்க கரைசலுக்கு நகர்கின்றன. 

  • செல்லிற்கு உள்ளேயும், வெளியேயும் மூலக்கூறுகள் இடம் பெயர்வது செல்களைச் சூழ்ந்துள்ள கரைசலின் செறிவைப் பொருத்ததாகும்.

  • இதனைப் பொருத்து சவ்வூடு பரவலின்நிலையினை மூன்றாக வகைப்படுத்தலாம்.



ஒத்த செறிவுக் கரைசல் (isotomic)

இதில், செல்லின் உட்புறக் கரைசலின் செறிவும் வெளிப்புறக் கரைசலின் செறிவும் ஒரே மாதிரியாக இருக்கும்.







குறை செறிவுக் கரைசல் (hypotomic)

இதில் செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு, உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட குறைவு. அதனால், வெளியிலிருந்து நீரானது,

செல்லின் உள்ளே செல்கிறது.









மிகை செறிவுக் கரைசல் (Hypertomic)

இதில் செல்லின் வெளியில் உள்ள கரைசலின் செறிவு உள்ளே உள்ள கரைசலின் செறிவை விட அதிகம். இதனால் நீரானது செல்லைவிட்டு

வெளியேறுகிறது. 






3. உட்சுவாசத்திற்கும், வெளிச்சுவாசத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?


உட்சுவாசம்

வெளிச்சுவாசம் 

உதரவிதானத் தசைகள் சுருங்குகின்றன

உதரவிதானத் தசைகள் மீட்சியடைகின்றன 

உதரவிதானம் கீழ்நோக்கி நகர்கிறது

உதரவிதானம் மேல்நோக்கி நகர்கிறத

விலா எலும்புகள் மேல் நோக்கியும் வெளிப்புறமும் நகர்கின்றன

விலா எலும்புகள் கீழ்நோக்கி நகர்கின்றன

மார்பறையின்கொள்ளளவு அதிகரிக்கிறது

மார்பறையின் கொள்ளளவு குறைகிறது.

காற்று மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழைகிறது

காற்று மூக்கின் வழியாக நுரையீரலிலிருந்து வெளியேறுகிறது. 


4. வளர்சிதை மாற்றத்தின் வகைகளை உதாரணத்துடன் விளக்குக.

  • உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்குத் தேவையான அனைத்து வேதிவினைகளின் தொகுப்பே வளர்சிதை மாற்றம் எனப்படும்.

  • வளர்சிதை மாற்றம், வளர் மாற்றம் (பொருள்களை உருவாக்குதல்) மற்றும் சிதை மாற்றம் (பொருள்களை உடைத்தல்) ஆகியவற்றை உள்ளடக்கியது.

வளர்மாற்றம் (Anabolism):

  • வளர்மாற்றம் என்பது உருவாக்குதல் மற்றும் சேமித்தலைக் குறிக்கிறது. இது புதிய செல்களின் வளர்ச்சி, உடல் திசுக்களைப் பராமரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைக்காக ஆற்றலைச் சேமித்தல் ஆகியவற்றிற்குக் காரணமாகிறது. 

  • வளர் மாற்றத்தின் போது கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பின் எளிய மூலக்கூறுகள் பெரிய, சிக்கலான மூலக்கூறுகளாக மாற்றப்படுகின்றன.


எடுத்துக்காட்டு:

குளுக்கோஸ்         → கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்

அமினோ அமிலங்கள் → நொதிகள் மற்றும் ஹார்மோன்கள், புரதங்கள்

கொழுப்பு அமிலங்கள் → கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள


சிதை மாற்றம் (catabolism)


  • சிதை மாற்றம் என்பது செல்லின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்கும் நிகழ்ச்சி ஆகும். 

  • இந்நிகழ்ச்சியின் போது பெரிய மூலக்கூறுகள் (பொதுவாக கார்போஹைட்ரேட்கள் மற்றும் கொழுப்புகள்) செல்களால் சிதைக்கப்பட்டு ஆற்றல் வெளியிடப்படுகிறது. 

  • இவ்வாறு வெளிப்படுத்தப்படும் ஆற்றலானது வளர்மாற்றத்திற்கான எரிபொருளை வழங்கி,உடலை வெப்பப்படுத்துகிறது; தசைச்சுருக்கம் மற்றும் உடல் இயக்கத்திற்குப் பயன்படுகின்றது. 

  • சிக்கலான வேதி மூலக்கூறுகள் மிக எளிய மூலக்கூறுகளாக சிதைக்கப்படுவதால் கழிவுப் பொருள்கள் உருவாகி அவை தோல், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.


எடுத்துக்காட்டு.

கார்போஹைட்ரேட் → குளுக்கோஸ்

குளுக்கோஸ் → கார்பன்டை ஆக்ஸைடு,நீர் மற்றும் வெப்பம்

புரதம் → அமினோ அமிலம்


5. சுவாச செயலியல் நிகழ்வுகளை விளக்குக.


உள்சுவாசம் (inspiration):

  • காற்றை நுரையீரல்களுக்குள் எடுத்துக்கொள்ளும் நிகழ்வு உள்சுவாசம் எனப்படும்.

  • உட்சுவாசத்தின்போது மார்பெலும்பு மேல் நோக்கியும், வெளிநோக்கியும் தள்ளப்படுவதோடு, உதரவிதானம் கீழ்நோக்கி இழுக்கப்படுகிறது. 

  • இதனால் மார்பறையின் கொள்ளளவு அதிகரித்து, அழுத்தம் குறைகிறது. நுரையீரல்களினுள் அழுத்தம் குறைவதால் வெளிக்காற்றானது நுரையீரல்களினுள் நுழைகிறது. 

  • இங்கு, காற்றுக்கும் இரத்தத்திற்கும் இடையே வாயுப்பரிமாற்றம் நிகழ்கிறது.






வெளிச் சுவாசம் (Expiration):

  • நுரையீரல்களிலிருந்து காற்றை வெளியேற்றும் நிகழ்வு வெளிச் சுவாசம் எனப்படும். 

  • வெளிச் சுவாசத்தின்போது நுரையீரல்கள் காற்றை அதிக விசையுடன் வெளித்தள்ளுகின்றன. பின்னர் விலா எலும்பிடைத் தசைகள் மீட்சியடைந்து, மார்பறையின் சுவர் அதன் பழைய நிலைக்குத்திரும்புகிறது. 

  • உதரவிதானமும் மீட்சியடைந்து மார்பறையில் மேல் நோக்கி நகர்கின்றது. 

  • இதன் காரணமாக மார்பறையின் அழுத்தம் புறச்சூழலை ஒப்பிடும்போது அதிகரிக்கிறது. 

  • மார்பறைக்கும் வளி மண்டலத்திற்கும் இடையே காணப்படும் இந்த அழுத்த வேறுபாட்டால் காற்றானது விசையுடன் வெளியேறுகிறது.

  • நுரையீரல்களிலிருந்து காற்று வெளியேற்றப்படும் இந்நிகழ்வு செயலற்ற (Passive) நிகழ்வாகக் கருதப்படுகிறது. 

காற்று நுண்ணறைகளினுள் வாயுப் பரிமாற்றம்:

  • காற்று நுண்ணறைகளிள் உள்ளே இழுக்கப்படும் காற்றில் உள்ள ஆக்சிஜனின் அளவு அங்குள்ள இரத்தக்குழல்களினுள் உள்ள ஆக்சிஜனின் அளவை விட அதிகம். 

  • இதனால் எளிய பரவல் மூலம் ஆக்சிஜன் இரத்தத்தினுள் நுழைகிறது. இரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சிஹீமோகுளோபினாக மாறுகிறது.

  • ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு இரத்தமானது இரத்தக்குழல்கள் வழியே இதயத்தை அடைகிறது. 

  • இதயம் சுருங்கி இந்த ஆக்சிஜன் உள்ள இரத்தத்தை உடலின் அனைத்துத் திசுக்களுக்கும் அனுப்புகிறது. 

  • திசுக்கள் வெளியேற்றும் கார்பன் டைஆக்சைடு இரத்தத்தின் வழியே காற்று நுண்ணறைகளுக்கு எடுத்துவரப்படுகிறது. 

  • இரத்தத்திலிருந்து பரவல்முறையில் கார்பன் டைஆக்சைடு காற்று நுண்ணறைகளில் நுழைந்து வெளிச்சுவாசத்தின் போது உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது


VIII. உயர்சிந்தனை வினாக்கள்

1 நமக்கு ஏன் உடனடியாக ஆற்றல் தேவைப்படுகிறது? குளுக்கோஸ் அந்த

ஆற்றலை வழங்கமுடியுமா? விளக்குக.



  • அதிகவெயில் காலத்திலும்,சோர்வடைந்த நிலையிலும் நாம் ஆற்றலை எளிதில்இழக்க நேரிடும், அந்த நேரத்தில் இழந்த ஆற்றலை ஈடுசெய்ய நமக்கு உடனடி ஆற்றல் தேவை.

  • குளுக்கோஸ் ஒரு எளிய சர்க்கரை. இது ஆக்ஸிஜனின் உதவியுடன் செல்லில் எளிதில் உடைந்து நமக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. 

  • குளுக்கோஸுக்கு செரிமானம் தேவையில்லை, இது நேரடியாக இரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.

  • எனவே, குளுக்கோஸை நேரடியாக எடுத்துக்கொள்ளும்போது, ​​அது செரிக்கப்படாமல், உடனடி ஆற்றல் மூலமாக செயல்படுகிறது.


2 ஊறுகாய் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதில் எந்தெந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன?


ஊறுகாய்கள் இரண்டு நொதித்தல் முறைகளில் தயாரிக்கப்படுகின்ற்ரன.

(i) உப்பில் ஊறவைக்கப்பட்ட ஊறுகாய்:

செறிவூட்டப்பட்ட உப்புநீரை (16% உப்பு வரை) பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, இங்கு உப்பு முதன்மைகாரணமாக இருக்கிறது, நொதித்தல் இரண்டாவது காரணமாகவும் இருக்கிறது.

(ii) வினிகர் ஊறுகாய்:  

மூலப்பொருட்களை வினிகர் (அசிட்டிக் அமிலம்), உப்பு மற்றும் சில நேரங்களில் சர்க்கரை சேர்த்து ஊறுகாய்களில் வெவ்வேறு சுவைகளை உருவாக்க உதவுகிறது.


புளிக்காத ஊறுகாய் பொதுவாக வெப்பத்தால் பதப்படுத்துதல் செய்யப்படுகிறது.


Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்