8 - அறிவியல் - ஒலியியல் - மதிப்பீடு - வினா- விடைகள்

 

ஒலியியல்

மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?

அ) காற்று 

ஆ) உலோகங்கள்

இ) வெற்றிடம் 

ஈ) திரவங்கள்

விடை: ஆ) உலோகங்கள்


2. பின்வருவனவற்றுள் அதிர்வுகளின் பண்புகள் எவை?

i) அதிர்வெண் ii) கால அளவு iii) சுருதி iv) உரப்பு

அ) i மற்றும் ii 

ஆ) ii மற்றும் iii

இ) (iii) மற்றும் (iv) 

ஈ) (i) மற்றும் (iv)

விடை: அ) i மற்றும் ii 


3. ஒலி அலைகளின் வீச்சு இதைத் தீர்மானிக்கிறது

அ) வேகம் 

ஆ) சுருதி

இ) உரப்பு 

ஈ) அதிர்வெண்

விடை: இ) உரப்பு


4. சித்தார் எந்த வகையான இசைக்கருவி?

அ) கம்பிக் கருவி 

ஆ) தாள வாத்தியம்

இ) காற்றுக் கருவி 

ஈ) இவை எதுவும் இல்லை

விடை: அ) கம்பிக் கருவி


5. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

அ) ஹார்மோனியம் 

ஆ) புல்லாங்குழல்

இ) நாதஸ்வரம்

ஈ) வயலின்

விடை: ஈ) வயலின்


6. இரைச்சலை ஏற்படுத்துவது

அ) அதிக அதிர்வெண் கொண்ட அதிர்வுகள்

ஆ) வழக்கமான அதிர்வுகள்

இ) ஒழுங்கான மற்றும் சீரான அதிர்வுகள்

ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்

விடை: ஈ) ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள்


7. மனித காதுக்குக் கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு

அ) 2 Hz முதல் 2,000 Hz வரை

ஆ) 20 Hz முதல் 2,000 Hz வரை

இ) 20 Hz முதல் 20,000 Hz வரை

ஈ) 200 Hz முதல் 20,000 Hz வரை

விடை: இ) 20 Hz முதல் 20,000 Hz வரை



8. ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்போது, பின்வருவனவற்றுள் எது உண்மையாக இருக்கும்?

அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.

ஆ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.

இ) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.

ஈ) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும்.

விடை: அ) உரப்பு அதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்.



9. இரைச்சலால் ஏற்படுவது எது?

அ) எரிச்சல் 

ஆ) மன அழுத்தம்

இ) பதட்டம் 

ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்



II. கோடிட்ட இடத்தை நிரப்புக.


1. ஒலி ____________ ஆல் உருவாக்கப்படுகிறது.

விடை: அதிர்வுகள்


2. தனி ஊசலின் அதிர்வுகள் ________________ என்றும் அழைக்கப்படுகின்றன.

விடை: குறுக்கலை


3. ஒலி ______________ வடிவத்தில் பயணிக்கிறது.

விடை: இயந்திர அலை


4. உங்களால் கேட்க முடியாத உயர் அதிர்வெண் கொண்ட ஒலிகள் ____________  எனப்படுகின்றன.

விடை: மீயொலி


5. ஒலியின் சுருதி அதிர்வுகளின் _______________ ஐச் சார்ந்தது.

விடை: எண்ணிக்கை


6. அதிர்வுறும் கம்பியின் தடிமன் அதிகரித்தால், அதன் சுருதி _______________ .

விடை: குறையும்.


III. பொருத்துக.

விடை: 


மீயொலி- அதிர்வெண் 20,000 Hz க்கு மேல் உள்ள ஒலி


காற்றில் ஒலியின் வேகம்-331 ms-1  


இன்ஃப்ராசோனிக்ஸ்- அதிர்வெண் 20 Hz க்குக் கீழ் உள்ள ஒலி


ஒலி-ஊடகம் தேவை 



IV. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றைத் தேர்வு செய்.


1. கூற்று: மின்னல் தாக்கும்போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து ஒலி

கேட்கப்படுகிறது.

காரணம்: ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.


2. கூற்று: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக்கொருவர் பேச முடியாது.

காரணம்: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.


அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

இ. கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.

ஈ. கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.

உ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.


விடை: 

1. அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

2. அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றின் சரியான விளக்கம்.



V. சுருக்கமாக விடையளி.


1. அதிர்வுகள் என்றால் என்ன?

ஒரு பொருளின் முன்னும் பின்னுமான இயக்கம் அதிர்வு எனப்படும்.ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப்படும்போது ஒலி உருவாகிறது.


2. ஒளி, ஒலியை விட வேகமாகப் பயணிக்கிறது என்பதைக் நிரூபிக்க ஒரு உதாரணம் தருக.

உதாரணம்:இடி, மின்னல்.

மின்னல் தாக்கும்போது மின்னலைப் பார்த்த சிறிது நேரம் கழித்து இடி ஒலி கேட்கிறது. ஏனென்றால், ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம்.



3. ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு எவ்வளவு மாற்றப்பட வேண்டும்?

ஒலியின் உரப்பை நான்கு மடங்கு அதிகரிக்க, அதிர்வுகளின் வீச்சு நான்கு மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். காற்றில் ஒலி ஒரு வினாடிக்கு 332 மீட்டர் பயணிக்கும். ஒளியானது ஒரு வினாடிக்கு 300000 கி.மீ பயணிக்கும்.


4. மீயொலி என்றால் என்ன?

20000 ஹெர்ட்ஸை விட அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி என அழைக்கப்படுகிறது. வெளவால்கள், நாய்கள், டால்பின்கள் போன்ற விலங்குகள் சில மீயொலிகளைக் கேட்க முடிகிறது.


5. இசைக்கும் இரைச்சலுக்கும் இடையிலான இரண்டு வேறுபாடுகளைத் தருக.


இசை

செவிக்கு இனிமையான ஒலி தருவது ‘இசை’ என்று அழைக்கப்படுகிறது. 

சீரான அதிர்வுகளால் இசை உருவாக்கப்படுகிறது. 

இசை மகிழ்ச்சியான உணர்வைத் தரும்

இரைச்சல்

காதுக்கு மகிழ்ச்சி தராத எந்த ஒலியும் இரைச்சல் என்று அழைக்கப்படுகிறது

ஒழுங்கற்ற மற்றும் சீரற்ற அதிர்வுகள் இரைச்சலை உருவாக்குகிறது.

இரைச்சலானது, எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.

6. ஒலி மாசுபாட்டின் விளைவுகள் யாவை?


• இரைச்சலானது, எரிச்சல், மன அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி ஆகியவற்றை ஏற்படுத்தலாம். 

• நீண்ட காலத்திற்கு இரைச்சலைக் கேட்கும் போது ஒரு நபரின் தூக்க முறை மாறக்கூடும். 

• தொடர்ந்து இரைச்சலைக் கேட்பதால் செவிப்புலன் திறன் பாதிக்கப்ப டலாம். சில நேரங்களில், இது செவிப்புலன் இழப்பிற்கு வழிவகுக்கிறது.


7. ஒலி மாசுபாட்டினைக் குறைக்க எடுக்க வேண்டிய இரண்டு நடவடிக்கைகளைக்

குறிப்பிடுக.

• சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும். 

• அனைத்து வாகனங்களும் ஒலியைக் குறைக்கும் சாதனங்களைக் (Silencer) கொண்டிருக்க வேண்டும்.


8. பின்வரும் சொற்களை வரையறுக்கவும்:

அ) வீச்சு ஆ) உரப்பு


அ) வீச்சு 

மையப்புள்ளியில் இருந்து துகள்களின் அதிக பட்ச இடப்பெயர்ச்சி வீச்சு எனப்படும்.

ஆ) உரப்பு

மெல்லிய ஒலியை உரத்த ஒலியிலிருந்து வேறுபடுத்துவதற்கு உதவும் ஒலியின் சிறப்பியல்பே உரப்பு என வரையறுக்கப்படுகிறது.


9. மரங்களை நடுவது எவ்வாறு ஒலி மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது?


-ஒலி உறிஞ்சுதல் மூலம். தண்டுகள், இலைகள், கிளைகள், மரம் போன்ற தாவர பாகங்கள் ஒலியை உறிஞ்சுகின்றன. 

-கரடுமுரடான பட்டை மற்றும் அடர்த்தியான, சதைப்பற்றுள்ள இலைகள் அவற்றின் மாறும் மேற்பரப்பு காரணமாக ஒலியை உறிஞ்சி ஒலி மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது.


VI. விரிவாக விடையளி.


1. ஒலி வெற்றிடத்தின் வழியாக பரவ முடியாது என்பதைக் காட்ட ஒரு சோதனையை விவரி.

நோக்கம்: 

ஒலி வெற்றிடத்தின் வழியாக பரவ முடியாது என்பதைக் கண்டறிதல்


தேவையான உபகரணங்கள்: 

மணி ஜாடி, அலைபேசி, வெற்றிட பம்ப்


செய்முறை:

ஒரு மணி ஜாடி மற்றும் அலைபேசியை எடுத்துக் கொண்டேன் 

அலைபேசியில் இசையை இசைக்கச் செய்து அதை ஜாடியின் உள்ளே வைத்தேன். 

ஒரு வெற்றிட பம்பைப் பயன்படுத்தி மணி ஜாடியிலிருந்து காற்றை வெளியேற்றினேன். ஜாடியிலிருந்து மேலும் மேலும் காற்று அகற்றப்படும்போது, அலைபேசியிலிருந்து வரும் ஒலி குறைந்து கொண்டே சென்று, இறுதியில் ஒலி நின்று விட்டது.


கண்டறிந்தது:

இந்த சோதனையிலிருந்து ஒலி வெற்றிடத்தில் பரவ முடியாது என்பது தெளிவாகிறது.

 

2. அலையின் பண்புகள் யாவை?


அலை இயக்கத்தின் பண்புகள்: 

i). அலை இயக்கத்தில், ஆற்றல் மட்டுமே கடத்தப்படுகிறது. துகள்கள் இடம்பெயர்வதில்லை.

ii). அலை இயக்கத்தின் திசைவேகம் அதிர்வுறும் துகளின் திசைவேகத்திலிருந்து வேறுபட்டது. 

iii). இயந்திர அலை பரவுவதற்கு ஊடகமானது, நிலைமம், மீட்சித்தன்மை, ஒரே விதமான அடர்த்தி மற்றும் துகள்களுக்கு இடையே குறைந்த அளவு உராய்வு ஆகியற்றைப் பெற்றிருக்க வேண்டும்.


இயந்திர அலையில் இரண்டு வகைகள் உள்ளன. 

அவை: 1. குறுக்கலை  2. நெட்டலை 


குறுக்கலை:

 குறுக்கலையில் துகள்க ள் அதிர்வுறும் திசையானது, அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக இருக்கும். எடுத்துக்காட்டு: கம்பிகளில் உருவாகும் அலைகள் மற்றும் ஒலி அலைகள். குறுக்கலைகள் திட மற்றும் திரவங்களில் மட்டுமே உருவாகும்


நெட்டலை:

 நெட்டலையில் துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாக அதிர்வுறுகின்றன. எ.கா:நீரூற்றுகளின் அலைகள் மற்றும் ஒரு ஊடகத்தில் பரவும் ஒலி அலைகள். நெட்டலைகள் திடப் பொருள், திரவங்கள் மற்றும் வாயுக்களிலும் உருவாகின்றன.



3. ஒலி மாசுபாட்டின் விளைவுகளை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?


பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒலி மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கலாம்.

• சமூக, மத மற்றும் அரசியல் விழாக்களில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும். 

• அனைத்து வாகனங்களும் ஒலியைக் குறைக்கும் சாதனங்களைக் (Silencer) கொண்டிருக்க வேண்டும். 

• வாகனம் ஓட்டும்போது அதிகப்படியாக ஒலி எழுப்பும் சாதனங்களைத் (Horn) தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும். 

• தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். 

• அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் குறைந்த ஒலியில் இயக்கப்பட வேண்டும். • குடியிருப்புப் பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்வதைத் தடுக்க வேண்டும். 

• மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி தொழிற்சாலைகளைச் சுற்றி பசுமையான நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும். 

• இரைச்சலான தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் காது பாதுகாப்பா ன்களை அணிய வேண்டும். 

• மரங்களை நடுவதற்கும், திரைச்சீலைகள் மற்றும் மெத்தைகள் போன்ற ஒலியை உள்ளிழுக்கும் பொருள்களை தங்கள் வீட்டில் பயன்படுத்துவதற்கும் மக்களை அறிவுறுத்த வேண்டும்.


4. மனித காதின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விவரி.


மனித காதுகள் செயல்படும் விதம்:

-ஒலியைக் கேட்க உதவும் முக்கியமான உறுப்பு காது ஆகும். 

-நாம் காதுகள் வழியாக ஒலியைக் கேட்க முடிகிறது. மனிதக் காது காற்றில் உள்ள உயர் அதிர்வெண் கொண்ட அதிர்வுகளை உள்ளிழுத்து அவற்றைப் பகுத்தாய்கிறது. -மனிதக் காதுகளின் வெளிப்புறப்பகுதியானது காது மடல் எனப்படும். இது சுற்றுப்புறத்தில் இருந்து ஒலியைச் சேகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. பின்னர் அது செவிக்குழாய் வழியாக செவிப்பறையை (டிம்பானிக் சவ்வு) அடையும். 

-ஒலி செவிப்பறையை அடையும்போது, செவியிலுள்ள சிற்றெலும்புகள் முன்னும் பின்னும் நகர்ந்து அதிர்வுகளை உருவாக்குகின்றன. இந்த அதிர்வுகள் உட்செவியிலுள்ள சிறப்பு செல்களை அடைகின்றன. 

-உள் காதில் இருந்து அதிர்வுகள் சமிக்ஞைகள் வடிவில் மூளைக்கு அனுப்பப்படுகிறது. 

-மூளை இந்த சமிக்ஞைகளை ஒலிகளாக உணர்கிறது.


VII. கணக்கீடுகள்.


1. துப்பாக்கியால் சுடப்பட்ட ஒலியை ருத்விக் மற்றும் ருகா ஆகிய இருவரும் 2 வினாடிக்குப் பிறகு கேட்கிறார்கள். துப்பாக்கி சுடப்பட்ட தொலைவிலிருந்து எவ்வளவு தொலைவில் அவர்கள் இருக்கிறார்கள்? (காற்றில் ஒலியின் வேகம் 331ms-1)


தீர்வு:

கொடுக்கப்பட்ட தகவல்

ஓலியின் வேகம் v = 331ms-1

நேரம் t = 2 வினாடி

தொலைவு = ?

தொலைவு = நேரம்  X  ஒலியின் வேகம்

                =  2s  X  331ms-1

                = 662 m

துப்பாக்கி சுடப்பட்ட தொலைவிலிருந்து அவர்கள் 662 m தொலைவில் இருக்கிறார்கள்.


2. ஒரு ஒலி அலை 8 வினாடிகளில் 2000 மீ பயணிக்கிறது எனில் ஒலியின் வேகம் என்ன?


தீர்வு:

கொடுக்கப்பட்ட தகவல்

நேரம் t     = 8s (வினாடி)

தொலைவு     = 2000m (மீ)



        தொலைவு

ஒலியின் வேகம் = --------------

                        நேரம்


    =             2000m

----------

8s

    =     250ms-1



3. 500 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒரு ஒலி அலை 200 மீ / வி வேகத்தில் பரவுகிறது அதன் அலைநீளம் என்ன?


தீர்வு:

கொடுக்கப்பட்ட தகவல்

அதிர்வெண் n = 500 Hz, 

வேகம் v         = 200 ms−1 

            λ = ?

        v = nλ 

λ =v / n

λ = 200 ms−1 / 500 Hz 


= 0.4m

அலைநீளம்		=	0.4m

Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 அறிவியல்- அன்றாட வாழ்வில் வேதியியல்- வினா-விடைகள்